2019 IPL போட்டிகள் எங்கே, எப்போது நடைபெறும்! புதிய அப்டேட்
2019 IPL போட்டிகள் எங்கே, எப்போது நடைபெறும்! புதிய அப்டேட்
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் IPL தொடரின் 12ஆவது சீசனை எங்கு எப்போது நடத்துவது என்பது தொடர்பாக BCCI மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியது. இந்நிலையில் இந்தவருடம் IPL போட்டிகள் இந்தியாவில் தான் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற உள்ள 12வது IPL சீசனுக்கான வீரர்கள் ஏலம் சில நாட்களுக்கு முன்பு நிறைவுபெற்றது. இந்தியாவில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக கட்சியின் ஆட்சிகாலம் 2019ல் நிறைவுபெறுகிறது. இதனால் 2019 மார்ச் - மே மாத இடைவெளியில் நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் சமயத்தில் IPL போட்டிகளை நடத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன.
இந்நிலையில் இந்த வருடம் IPL போட்டிகள் வெளிநாட்டில் நடத்துவதா இந்தியாவிலேயே நடத்துவதா என குழப்பத்தில் இருந்தது BCCI. இதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டினால் அமைக்கப்பட்ட குழு நேற்று டெல்லியில் கூடி ஆலோசனை செய்தனர். இதன் முடிவில் IPL 12வது சீசனை இந்தியாவிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் IPL போட்டிகளை மார்ச் 23 ஆம் தேதி துவக்குவதற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.