தனது குடும்பம் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளதால் பிரபல கிரிக்கெட் வீரர் கடும் கவலை.! கெவின் பீட்டர்சன் கொடுத்த தகவல்.!

தனது குடும்பம் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளதால் பிரபல கிரிக்கெட் வீரர் கடும் கவலை.! கெவின் பீட்டர்சன் கொடுத்த தகவல்.!



kevin-pietersen-talk-about-rashid-khan

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கிருந்து வெளியேறும் நோக்குடன் ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகிறார்கள். 

இந்நிலையில் அந்த நாட்டின் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தனது குடும்பத்தை ஆப்கானிஸ்தானிலிருந்து உடனடியாக வெளியேற்ற முடியாத சூழலினால் கவலை கொண்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் "தி ஹன்ட்ரட்" 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் டிரண்ட் ராக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். 

Kevin Pietersen

இதுதொடர்பாக கெவின் பீட்டர்சன் கூறுகையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்போதைய நிலை குறித்து நானும், ரஷித் கானும் நீண்ட நேரம் உரையாடினோம். தனது நாட்டின் நிலையை குறித்து வருத்தப்படும் அவர், தனது குடும்பத்தை அங்கிருந்து வெளிக்கொண்டு வர முடியாத கவலையில் மூழ்கியுள்ளார் என தெரிவித்துள்ளார்.