விராட் கோலியின் உயிருக்கு ஆபத்தா?.. கிரிக்கெட் மைதானத்தில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு.!!



ipl-2024-rcb-eliminator-round-virat-kohli-protection-in

 

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்து இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்று ராஜஸ்தான் - பெங்களுர் அணிகள் இடையே எலிமினேட்டர் ரவுண்ட் நடக்கிறது. 

இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி, இரண்டாவது தகுதி சுற்றுக்கு தேர்வாகி ஹைதராபாத் அணியுடன் மோதவுள்ளது. இன்று நடைபெறும் எலிமினேட்டர் ரவுண்ட் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. 

இதையும் படிங்க: கோபத்துடன் மைதானங்களில் முகத்தை வைத்திருப்பது ஏன்? - மனம்திறந்த கெளதம் காம்பீர்.!

cricket news

இதனிடையே, சமீபத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், விராட் கோலிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக காலை தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனால் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெங்களூர் அணியின் பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு ஆகியவை ரத்து செய்யப்பட்டன. போட்டி இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவுள்ளது.

இதையும் படிங்க: கோபத்துடன் மைதானங்களில் முகத்தை வைத்திருப்பது ஏன்? - மனம்திறந்த கெளதம் காம்பீர்.!