மும்பை அணியின் மிரட்டல் பந்துவீச்சு.! கடைசி நேரத்தில் நடந்த பரபரப்பு.! அசால்ட்டு செய்த டெல்லி அணி.!

மும்பை அணியின் மிரட்டல் பந்துவீச்சு.! கடைசி நேரத்தில் நடந்த பரபரப்பு.! அசால்ட்டு செய்த டெல்லி அணி.!


delhi-capitals-won-by-6-wkts

ஐ.பி.எல். தொடரின் 13-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நேற்றய போட்டியில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதனையடுத்து மும்பை அணியின் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டிகாக் களமிறங்கினர். டிகாக் 4 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தநிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 44 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

       Mumbai indians

இதனையடுத்து மும்பை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணியின் துவக்க வீரர்களாக ப்ரித்வீஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். ப்ரித்வீஷா 7 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கி நிதானமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்கள் எடுத்தநிலையில் எல்.பி.டபில்யூ. முறையில் அவுட் ஆனார். 

அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் 45 ரன்கள் எடுத்த நிலையில், கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய  ரிஷப் பண்ட் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.