திடீரென மைதானத்தில் நுழைந்து காலில் விழுந்த ரசிகர்! குப்புற விழுந்த ரோஹித் ஷர்மா! கடுப்பான சுனில் கவாஸ்கர்!

திடீரென மைதானத்தில் நுழைந்து காலில் விழுந்த ரசிகர்! குப்புற விழுந்த ரோஹித் ஷர்மா! கடுப்பான சுனில் கவாஸ்கர்!


cricket fan enters stadium


இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான நேற்றைய போட்டியில் ரசிகர் ஒருவர் பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் ஓடிவந்து  ரோஹித் ஷர்மாவின் காலில் விழுந்துள்ளார்.

உலக அளவில் கிரிக்கெட்டிற்கு தீவிர ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் அது இந்தியாவில் தான். எந்த நாட்டில் கிரிக்கெட் நடந்தாலும் இந்திய ரசிகர்கள் அங்கு சென்று ஆட்டத்தை ரசிப்பார்கள். சச்சின் டெண்டுல்கர் ஆட்டத்தின்போது பலமுறை ரசிகர்கள் அவரின் அருகில் சென்றுவிடுவோமா என்ற ஏக்கத்தில் இருப்பார்கள். இதனையடுத்து தல தோனியின் ரசிகர்கள் பலமுறை மைதானத்திற்குள் புகுந்து அவரின் காலில் விழுந்துள்ளனர்.

cricket

நேற்றைய ஆட்டத்தின்போது தென் ஆப்ரிக்க அணியின் செனுரான் முத்துசாமி அவுட்டாகி வெளியேறி போது, அடுத்த மட்டையாளர் வெர்னோன் பிலான்டர் வரும் வரை இந்திய வீரர்கள் காத்திருந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் பாதுகாவலர்களை மீறி மைதானத்துக்குள் ஓடிவந்து ரோஹித் ஷர்மாவிடம் சென்று அவரது காலில் விழுந்துள்ளார்.

அந்த ரசிகர் வேகமாக ஓடிவந்து விழுந்ததால் ரோஹித் ஷர்மா பேலன்ஸ் இல்லாமல் அந்த ரசிகர் மீதே தவறிவிழுந்தார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாவலர்கள் ஆட்டத்தை கவனிப்பதால் தான் ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்துவிடுவதாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.