திரும்ப வந்துட்டோம்னு சொல்லு.! சிஎஸ்கே அணியின் பழைய கெத்து மீண்டும் அரங்கேறியது.! ஆட்ட நாயகன் யார் தெரியுமா.?

திரும்ப வந்துட்டோம்னு சொல்லு.! சிஎஸ்கே அணியின் பழைய கெத்து மீண்டும் அரங்கேறியது.! ஆட்ட நாயகன் யார் தெரியுமா.?


Chennai Super Kings won by 6 wkts

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மும்பையில் இன்றிரவு நடைபெற்ற  8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதனையடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரிலேயே துவக்க வீரர் மயங்க் அகர்வால் ரன் ஏதும் எடுக்காமல் தீபக் சாஹர் ஓவரில் போல்ட் ஆனார். இதையடுத்து தீபக் சாஹர் வீசிய 3வது ஓவரில் கே.எல்.ராகுல் 5 ரன் எடுத்த நிலையில் ஜடேஜாவிடம் ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்ததாக கிறிஸ் கெய்ல் 10 ரன்களில் அவுட் ஆனார் இதனையடுத்து பஞ்சாப் அணியினர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

     csk

பஞ்சாப் அணியில் நிதானமாக ஆடிய சாருக்கான் மாட்டும் அதிகபட்சமாக 47 ரன்களை எடுத்து அவுட் ஆனார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக தீபக் சாஹர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

இதனையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. சென்னையின் துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவுட் ஆனார். இதனையடுத்து இதனையடுத்து களமிறங்கிய மொயின் அலி பவுண்டரிகளையும், சிக்சர்களையும் பறக்கவிட்டு 46 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய ரெய்னா 8 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இறுதி வரை நின்று ஆட்டமிழக்காமல் ஆடிய டு ப்ளிசிஸ் 36 ரன்கள் எடுத்திருந்தார்.

csk

இறுதியில்15.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து, 107 ரன்கள் எடுத்து சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பஞ்சாப் அணியில் முகமது சமி 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் முருகன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக தீபக் சாஹர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.