இந்த தொடரில் தாக்கு பிடிக்குமா சென்னை.. அடுத்தடுத்து ஏற்படும் சரிவுகள்.!
இந்த தொடரில் தாக்கு பிடிக்குமா சென்னை.. அடுத்தடுத்து ஏற்படும் சரிவுகள்.!
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகமானதை அடுத்து இந்த வருடம் நடைப்பெற இருந்த 13 வது ஐபிஎல் போட்டியானது இந்தியாவில் நடைப்பெறாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 19 ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கப்பட்டது.
முதல் நாள் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. அதில் அம்பதி ராயுடு 48 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
ஆனால் அதனை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அம்பதி ராயுடு பங்கேற்கவில்லை. அதற்கு காரணம் அவருக்கு ஏற்பட்ட சிறிய காயம் தான். அதன் காரணமாக இன்னும் ஒன்று, இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது.