இருவர் அல்ல.. இனி மூவர்.. விராட் கோலி, அனுஷ்கா சர்மா வெளியிட்ட இன்ப செய்தி!
இருவர் அல்ல.. இனி மூவர்.. விராட் கோலி, அனுஷ்கா சர்மா வெளியிட்ட இன்ப செய்தி!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவிற்கும் 2017 ஆம் திருமணம் நடைபெற்றது. இருவரும் அதற்கு முன்னரே காதலித்து வந்தனர்.
கிட்டத்தட்ட 3 வருடங்கள் நிறைவுற்ற நிலையில் குழந்தை பற்றிய கேள்வியை பலர் அனுஷ்காவிடம் கேட்டுவந்தனர். தற்போது இதற்கு விடையளித்துள்ளனர் அனுஷ்கா மற்றும் விராட் தம்பதியர்.
இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு நாங்கள் இனி மூவர்.. புதிய வரவு ஜனவரி 2021ல் காத்திருக்கிறது என பதிவிட்டுள்ளனர். அதில் அனுஷ்கா சர்மா கர்ப்பமாய் இருப்பது தெரியும்படி புகைப்படம் எடுத்துள்ளனர்.
And then, we were three! Arriving Jan 2021 ❤️🙏 pic.twitter.com/0BDSogBM1n
— Virat Kohli (@imVkohli) August 27, 2020