அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் திடீர் ஓய்வு! அதிர்ச்சியில் ரசிகர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் திடீர் ஓய்வு! அதிர்ச்சியில் ரசிகர்கள்
தென் ஆப்பிரிக்காவின் சிறந்த ஆல் ரவுண்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முக்கிய பங்காற்றியவருமான ஆல்பி மோர்கல் தன் ஓய்வை அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணிக்காக 15 ஆண்டுகள் ஆடியவர் ஆல்பி மோர்கல். சர்வதேச அளவில் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான இவர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் பல சாதனைகளை படைத்துள்ளார். இவர் தென் ஆப்பிரிக்கா அணிக்காக அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்தியர்களின் மனதில் குறிப்பாக சென்னை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர் ஆல்பி மோர்கல். இதற்கு காரணம் இவர் சென்னை அணிக்காக ஆற்றிய முக்கிய பங்கு தான். IPL முதல் சீசன் துவங்கி 2014 ஆம் ஆண்டு வரை இவர் சென்னை அணிக்காக விளையாடினார். பிறகு 2014ல் பெங்களூரு, 2015ல் டெல்லி, 2016ல் புனே ஆகிய அணிகளுக்காக ஆடினார்.
சென்னை அணிக்கு பல இக்கட்டான சூழ்நிலைகளில் வெற்றியைத் தேடித்தந்த ஆல்பி மோர்கல் இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவருக்கு வயது 37. இவரது சகோதரர் மோர்னே மோர்கலும் சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார்.
That’s the end for me and what a journey it’s been! Plenty of memories good and bad, but I was blessed with a very long career. Thanks @Titans_Cricket @OfficialCSA, will enjoy the game now from the other side. pic.twitter.com/sXik0KYFbz
— Albie Morkel (@albiemorkel) January 9, 2019