டெல்லி கேப்டன் ரிஷாப் பண்ட்-க்கு அடிக்கு மேல் அடி.! ரூ.12 லட்சம் அபராதம்.! என்ன காரணம்.?

டெல்லி கேப்டன் ரிஷாப் பண்ட்-க்கு அடிக்கு மேல் அடி.! ரூ.12 லட்சம் அபராதம்.! என்ன காரணம்.?



12 laksh fined to rishap pant

2022 ஐ.பி.எல். தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் டெல்லி அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அணியின் கேப்டன் என்ற முறையில் ரிஷாப் பண்ட்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணி தோல்வியால் அந்த அணி புள்ளிபட்டியலில் பின்னடைவை சந்தித்தது மட்டுமல்லாமல் அந்த அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது டெல்லி அணி கேப்டன்  ரிஷாப் பண்ட்-க்கு தலைவலியாய் அமைந்துள்ளது.