
sisters are love in same boy
சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிபவர் கிஷோர் கோத்தாரி. இவருக்கு வயது 40. இவர் புரசைவாக்கம், பெருமாள் தெருவில் தனது மனைவி சீமா(28) மற்றும் சீமாவின் தங்கை பேபியும்(18) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
கிஷோர் கோத்தாரி வழக்கமாக தினமும் காலை 10 மணிக்கு வேலைக்கு செல்பவர் மாலை தான் வீடு திரும்புவார். இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் காலையில் வேளைக்கு சென்றவர் திடீரென காலை 11 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் கதவு உள்ள பக்கமாக பூட்டியிருந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு மனைவி சீமா வந்து கதவை திறந்துள்ளார்.
மிகவும் தாமதமாக கதவை திறந்த சீமாவின் முகத்தில் ஒரு விதமான பதட்டம் இருப்பதை கண்டுகொண்டார் கோத்தாரி. இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டுக்குள் வந்ததும் படுக்கை அறைக்கு சென்றார். அங்கு அவரது மனைவியின் தங்கை பேபி நின்று கொண்டிருந்தார். அவரும் சற்று பதற்றத்துடன் தான் இருந்துள்ளார். இதனால் கோதரியின் சந்தேகம் மேலும் அதிகரிக்க துவங்கியது.
பின்னர் படுக்கை அறையை ஒட்டியுள்ள குளியல் அறையை திறந்து பார்த்த கோதரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குளியல் அறையில் ஒரு மர்ம வாலிபர் பதுங்கி இருந்தார்.
அவரை மடக்கிப் பிடித்த கோத்தாரி, அவர் யார் என்று விசாரிக்க துவங்கினார். என்ன சொல்வதென்று புரியாமல் திளைத்த அக்காவும் தங்கையும் உளற ஆரம்பித்தனர். பின்னர் அந்த மர்ம வாலிபர் தங்களது உறவினர் என்றும், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்துள்ளதாகவும், கணவரிடம் சீமா தெரிவித்தார்.
ஆனால் அதை கோத்தாரியால் அதை நம்ப முடியவில்லை. பின்னர் அவர் அருகில் தங்கி இருக்கும் தனது தம்பிக்கு தகவல் கொடுத்து வீட்டுக்கு வரவழைத்தார்.
இந்த பிரச்சினையில் அடி-தடி மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காய்கறி வெட்டும் கத்தியால், கிஷோர் கோத்தாரி குத்தப்பட்டார். இதை தடுத்த அவரது தம்பிக்கும் கத்திக்குத்து விழுந்தது. சீமா, கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இது பற்றி உடனடியாக கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
கீழ்ப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் போலீஸ் படையுடன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். கத்திக்குத்தில் காயம் அடைந்த கோத்தாரி மற்றும் அவரது தம்பி இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
வீட்டு குளியலறையில் பதுங்கி இருந்த மர்ம வாலிபரின் பெயர் ரவிபிரகாஷ்(20) என்றும் கல்லூரி மாணவரான இவர் சீமா மற்றும் அவரது தங்கை பேபியுடன் பேஸ்புக் மூலம் அறிமுகமானவர் என்பதும் தெரியவந்துள்ளது. நாளடைவில் அக்காவும் தங்கையும் ரவிபிரகாசிடம் காதலில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜஸ்தானில் இருந்து ரவிபிரகாஷை சென்னைக்கு வருமாறு
அழைத்துள்ளனர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற ஆசையில் ரவிப்பிரகாஷ் சென்னை வந்துள்ளார். சென்னையில் தங்கிய இவர் அடிக்கடி கோத்தாரியின் வீட்டிற்கு வந்து அக்கா தங்கை இருவருடன் உல்லாசமாக இருந்திருப்பார் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அதேபோல் தான் அன்றும் அவர் கோத்தாரி வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்து, படுக்கை அறையில் அக்கா தங்கை இருவருடன் உல்லாசமாக இருந்திருப்பார்.
இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவரையும், அவரது தம்பியையும் கத்தியால் குத்தியதாக சீமாவும், அவரது தங்கை பேபியும், வீட்டுக்குள் நுழைந்த பட்டதாரி வாலிபர் ரவிபிரகாஷும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement