நடிகையுடன் படுக்கை அறையில் இருந்த புகைப்படத்தை வெளியிட்ட உதவி இயக்குனர்!! கண்கலங்கும் நடிகை!
நடிகையுடன் படுக்கை அறையில் இருந்த புகைப்படத்தை வெளியிட்ட உதவி இயக்குனர்!! கண்கலங்கும் நடிகை!
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளிவரும் சீரியலில் நடித்து வருபவர் நடிகை நிலானி. இவர் ஏற்கனவே திருமணமானவர். தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வருகிறார்.
கணவரைப் பிரிந்து தனியாக வாழும் நிலானி, உதவி இயக்குநரான காந்தி லலித்குமார் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் படுக்கையில் ஒன்றாக இருக்கும் அளவிற்கு நெருங்கி பழகியுள்ளனர்.
இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகிய தருணங்களில் பல்வேறு புகைப்படங்களை எடுத்துள்ளனர். இருவரும் தனியாக படுக்கை அறையில் இருந்தபோதும் ஒரு சில புகைப்படத்தை உதவி இயக்குனர் எடுத்துள்ளார்.
இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று நிலானி படப்பிடிப்புத் தளத்தில் இருந்தபோது அங்கு வந்த காந்தி லலித்குமார், நிலானியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனது காதலர் திருமணம் செய்துக்கொள்ளும்படி வற்புறுத்துவதாக காவல் நிலையத்தில் நடிகை நிலானி புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், இருவரையும் அழைத்து வந்த விசாரித்த போலீசார், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து லலித் குமார் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்றி கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். உதவி இயக்குனரான லலித் குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இறப்பதற்கு முன் காதலன் காந்தி லலித்குமார் நிலானியுடன் ஒன்றாக இருந்த படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதில், அவர்கள் இருவரும் ஒன்றாக படுக்கையைப் பகிர்ந்து கொண்டுள்ள படத்தையும் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.