அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
மத்தியில் ஆட்சி அமைக்க போவது இவர்கள் தான்! தமிழகத்தின் நிலை!
மத்தியில் ஆட்சி அமைக்க போவது இவர்கள் தான்! தமிழகத்தின் நிலை!
இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதில் பாஜக 217 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 97 இடங்களிலும் மற்றவை 72 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. திமுக-31 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.