எனக்கே எண்ட் கார்டா?? உயிருடன் இருக்கும்போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர்! நக்கலாக இணையத்தையே தெறிக்கவிட்ட நடிகை விந்தியா!!

எனக்கே எண்ட் கார்டா?? உயிருடன் இருக்கும்போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர்! நக்கலாக இணையத்தையே தெறிக்கவிட்ட நடிகை விந்தியா!!


vinthiya-reply-for-kanner-anjali-poster

தமிழ் சினிமாவில் 1999-ம் ஆண்டு வெளியான சங்கமம் படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை விந்தியா.
இவரது முதல் படமே பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் நடிகை விந்தியா 2008-ம் ஆண்டு நடிகை பானு ப்ரியாவின் சகோதரர் கோபால கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட அவர் கடந்த 2012-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றார்.

பின்னர் மீண்டும் சில திரைப்படங்களில் நடித்த அவர் அரசியலில் களமிறங்கி அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் அவர் தற்போது நடிகை விந்தியா திடீர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்ற கண்ணீர் அஞ்சலி போஸ்டரை திமுகவினர் ஒட்டியிருப்பதாக கூறி டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா. என தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.