42 வயதில் இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்த தமிழ் சீரியல் நடிகை; குவியும் வாழ்த்துக்கள்.!
#Election2024: "பச்சோந்தி போல நிறம் மாறக்கூடியவர் டிடிவி தினகரன்..." - எடப்பாடி பழனிச்சாமி அட்டாக்கிங் பேச்சு.!
![ttv-dhina-karan-ls-like-chameleon-he-chage-his-colors-o](https://cdn.tamilspark.com/large/large_20240409205208-72024.jpg)
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் ஒன்றாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த பொது தேர்தலில் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் நான்காம் தேதி நடைபெற்று அதன் பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 102 தொகுதிகளில் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த காலங்களில் பாஜகவுடன் பயணித்த அதிமுக அவர்களுடனான கூட்டணியை முடித்துக் கொண்டு தங்களது தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. கடந்த காலங்களில் அதிமுகவில் பயணித்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பாஜக சார்பாக தேர்தலில் போட்டியிடுகின்றனர்
இந்நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் டிடிவி தினகரன் பச்சோந்தி போல நிறம் மாறி வருவதாக தெரிவித்து இருக்கிறார். நேரத்திற்கு தகுந்தார் போல் பேசி வருவதாக குற்றம் சாட்டி உள்ளார்.
கடந்த தேர்தல்களில் பாஜக நோட்டாவுடன் தான் போட்டி போடும் எனக் கூறிய டிடிவி தினகரன் இந்த முறை பாஜக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறார். பாஜகவின் வெற்றிக்கு அணில் போல உதவுவேன் என்று கூறுகிறார். இதேபோன்று சந்தர்ப்பவாத பேச்சுக்களை அவர் தொடர்ந்து பேசி வருவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருக்கிறார்.