காங்கிரஸில் அதிரடி மற்றம்! மகளிர் தேசிய பொதுச் செயலாளராக திருநங்கை நியமனம்!

காங்கிரஸில் அதிரடி மற்றம்! மகளிர் தேசிய பொதுச் செயலாளராக திருநங்கை நியமனம்!


transgender-apsara-reddy-in-congress

அதிமுகவில் இருந்து காங்கிரஸில் இணைந்துள்ள பிரபல திருநங்கையும், பத்திரிகையாளருமான அப்சரா ரெட்டியை அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளராக ராகுல் காந்தி நியமித்துள்ளார்.

அதிமுகவில் செய்தித் தொடர்பாளர், பத்திரிகையாளர், சமூக சேவகர், டாக் ஷோ தொகுப்பாளர் என பல்வேறு திறமைகளை கொண்டவர் பிரபலமான திருநங்கை அப்சரா ரெட்டி. இவர் தற்பொழுது அதிமுக கட்சியை விட்டு விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார். 

congress

அப்சரா ரெட்டி தான் சார்ந்த சமூகத்திற்காக தொடர்ந்து போராடி வருபவர். மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார் அப்சரா ரெட்டி. மேலும் ஜெயா டிவியில் ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட உடலியல் மாற்றங்களால் குடும்பத்தினரே இவரை வெறுத்து ஒதுக்கினர். பின்னர் இவர் பாலின அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு திருநங்கையாக மாறினார். அப்சரா ரெட்டி ஆஸ்திரேலியாவில் படித்துள்ளார்.

இந்நிலையில் அதிமுகவை விட்டு விலகியுள்ள அப்சரா ரெட்டி காங்கிரஸில் இணைந்துள்ளார். இவருக்கு காங்கிரஸ் கட்சி புதிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. அப்சரா ரெட்டியை அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளராக ராகுல் காந்தி நியமித்துள்ளார்.