வெற்றிக்கு பின் உற்சாகத்துடன் மோடி வெளியிட்ட முதல் பதிவு! என்ன கூறியுள்ளார் தெரியுமா?

வெற்றிக்கு பின் உற்சாகத்துடன் மோடி வெளியிட்ட முதல் பதிவு! என்ன கூறியுள்ளார் தெரியுமா?



modi-first-tweet-after-success

இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்திய அளவில் பாஜக கூட்டணி 342 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்ற மாநில கட்சிகள் 110 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகள் பெரிதாக எங்குமே வெற்றிபெறவில்லை. 

modi

இந்நிலையில் பெரும்பான்மையான வெற்றிபெற்று மீண்டும் கோட்டையில் ஆட்சியமைக்கவிருக்கும் மோடி முதன்முதலாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஒன்றாக இணைந்து வளர்வோம். ஒன்றாக வளமையடைவோம். ஒன்றாக இணைந்து வலுவான மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.