#JUSTIN ||  முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் ஆஜராக உத்தரவு!!

#JUSTIN ||  முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் ஆஜராக உத்தரவு!!



Former minister Vijayabaskar ordered to appear again

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், அவரை மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக நேரில் ஆஜராகினர்.

இவர், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு பதியப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, கடந்த மே 22ம் தேதி 216 பக்க குற்றப்பத்திரிகை லஞ்ச ஒழிப்பு போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் மீண்டும் செப்டம்பர் 26ஆம் தேதி ஆஜராக உத்தரவு இடப்பட்டுள்ளது.