அரக்கோணம் தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.எம்.வேலு காலமானார்!
அரக்கோணம் தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.எம்.வேலு காலமானார்!
அரக்கோணம் மக்களவைத் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.வேலு (75) இன்று வியாழக்கிழமை காலை காலமானார். இவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டு சென்னை ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். நுரையீரல் தொற்று காரணமாக அதே மருத்துவமனையில் காலமானார்.
இவர் கடந்த 1980ல் காங்கிரஸ் சார்பிலும் 1996ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பிலும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சோளிங்கர் சட்டமன்ற தொகுதியை பூர்வீகமாக கொண்ட இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.
ஏ.எம்.வேலுவின் உடல் சென்னை, போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வியாழக்கிழமை மதியம் வைக்கப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.