அம்மா இருக்கேன்டா..! தண்ணீரில் மூழ்கி தத்தளித்த குட்டிகள்..! உயிரைப் பணயம் வைத்த தாய் எலி..! வைரல் வீடியோ.!

அம்மா இருக்கேன்டா..! தண்ணீரில் மூழ்கி தத்தளித்த குட்டிகள்..! உயிரைப் பணயம் வைத்த தாய் எலி..! வைரல் வீடியோ.!


Rat saves it cubes from rain water viral video

கொட்டும் மழையில் நீருக்குள் சிக்கிய தனது குட்டிகளை தாய் எலி போராடி மீட்கும் காட்சி வீடியோவாக வெளியாகி வைரலாகிவருகிறது.

பொதுவாக மனிதர்கள் மட்டும் இல்லாது அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒன்று தாய் பாசம். தனது பிள்ளைகளுக்கு ஒன்னு என்றால் உயிரையும் கொடுக்க துணியும் தாய்மார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதேபோல் தனது குட்டிகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் மனிதர்கள் போராடி தனது குட்டிகளை காப்பாற்றும் விலங்குகளும் இந்த மண்ணில்  வாழ்ந்துதான் வருகிறது.

அந்த வகையில், திருப்பூரில் கனமழையால் எலி குடியிருந்த ஓட்டைக்குள் தண்ணீர் புகுந்த நிலையில், எலி ஒன்று தன் உயிரை பொருட்படுத்தாமல், நீருக்குள் மூழ்கிய தன் குட்டிகளை காப்பாற்றிய நிகழ்வு வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் எலி ஒன்று தண்ணீர் புகுந்த ஓட்டைக்குள் இருந்து தனது குட்டிகளை ஒவ்வொன்றாக மீட்டு, அருகில் இருக்கும் வீட்டில் கொண்டுபோய் சேர்க்கிறது. தனது உயிரையும் பொருட்படுத்தாமல் நீரில் மூழ்கிய தனது குட்டிகளை காப்பாற்றும் அந்த எலியின் செயலை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வீடியோவை பார்க்கும் பலரும், இதுதான் உண்மையான தாய் பாசம் என கமெண்ட் செய்துவருகின்றனர். நீங்களும் அந்த காட்சியை பாருங்கள்.