மது அருந்திய பிறகு மறந்தும்கூட இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்! மிகவும் ஆபத்து!

மது அருந்திய பிறகு மறந்தும்கூட இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்! மிகவும் ஆபத்து!



Foods should avoid after drinks in tamil

இன்று நம்மில் பலருக்கு இருக்கும் பொதுவான பழக்கத்தில் ஒன்றாகிவிட்டது மது அருந்துவது. மது அருந்தாதவர்களே இல்லை என்ற அளவிற்கு இன்று பலர் மது அருந்த ஆரம்பித்துவிட்டனர். இதில் மேலும் கொடுமையான விஷயம் என்னவென்றால் சிறுவர்கள் கூட இந்த பழக்கத்திற்கு அடிமையாகிவருகின்றனர்.

மது அருந்துவது மிகவும் தவறானது என எத்தனையோ விளம்பரங்களும் வந்துகொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் மது அருந்துவதை விட மது அருந்திய பிறகு சாப்பிடும் ஒருசில உணவுகள் மிகவும் ஆபத்து என கூறுகின்றனர்.

health tips

பொதுவாக மது அருந்தினால் அதன்பின்னர் சாப்பிடும் உணவுகள் எளிதில் ஜீரணம் ஆக கூடியதாக இருக்க வேண்டும். ஜீரணம் ஆகாத பொருட்களை சாப்பிடுவதால் அது மேலும் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். குறிப்பாக மது அருந்திய பிறகு எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

மது அருந்திய பிறகு தப்பி தவறிகூட அகத்தி கீரையை சாப்பிடக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். மது அருந்திய பிறகு அகத்தி கீரை சாப்பிடுவது மிகவும் ஆபத்தான ஒன்றாம்.