மனிதர்கள் கூட இவ்வாறு செய்யமாட்டார்கள்! பசுமாடுகளின் வினோத செயல்! வைரல் வீடியோ!

மனிதர்கள் கூட இவ்வாறு செய்யமாட்டார்கள்! பசுமாடுகளின் வினோத செயல்! வைரல் வீடியோ!


cow crossed road video


தற்போதைய வாழ்க்கைமுறையில் மனிதர்களை விட விலங்கினங்கள் தான் விதிமுறையை கடைபிடிக்கின்றனர். தற்போது நகர்ப்புறங்களில் பகலில் அதிகப்படியான வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும்பொழுது நடந்து செல்பவர்கள் சிக்னலை கண்டுகொள்ளாமல் நடந்து செல்வார்கள். ஆனால் சமீபத்தில், நாய் ஒன்று ரெட் சிக்னல் விழுந்தால் மட்டுமே சாலையை கடக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. 

இந்தநிலையில், ஒரு சாலையை கடக்க சென்ற மாடுகள் வெள்ளை கோட்டினை பார்த்து தடுப்பு சுவர் என நினைத்துக்கொண்டு தாண்டிதாண்டி ஓடிச் சென்ற காட்சி ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோ வீடியோ பதிவினை வனத்துறை அதிகாரியான பர்வீன் கேசவன் என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில், "சில தடைகள் மனதில் உள்ளன. இதை நிரூபிக்க இதை விட சிறந்த உதாரணத்தை நீங்கள் காண மாட்டீர்கள்" என அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இதனைப்பார்த்த பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.