கொரோனா அச்சுறுத்தல்! நடுரோட்டில் நண்பனை மடியில் போட்டு தவித்த இளைஞன்! மனதை உருக்கும் சம்பவம்!

கொரோனா அச்சுறுத்தல்! நடுரோட்டில் நண்பனை மடியில் போட்டு தவித்த இளைஞன்! மனதை உருக்கும் சம்பவம்!


Youngman stand with his Friend while last breath

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் நண்பர்கள் யாகூப் முகமது மற்றும் அம்ரித் குமார். இவர்கள் பிழைப்புத் தேடி சூரத் பகுதிக்கு வந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் வேலையில்லாமல் தவித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் சொந்த ஊருக்கு புறப்பட முடிவு செய்த அவர்கள் ஒரு லாரியில் 4,000 ரூபாய் கொடுத்து உத்தரப்பிரதேசத்துக்கு புறப்பட்டுள்ளனர். அப்பொழுது அவர்கள் லாரியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் உட்காரமுடியாமல் நின்றுகொண்டே பயணம் செய்துள்ளார்.

help

இந்நிலையில் லாரி மத்தியப்பிரதேச தேசிய நெடுஞ்சாலைகளில் சென்றுகொண்டிருந்தபோது அம்ரித் குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடையத் தொடங்கியநிலையில் அம்ரித்துக்கு கொரோனா பாதிப்பு  ஏற்பட்டுவிட்டதோ என யாகூப் பயந்துள்ளார்.அந்த வாகனத்தில் இருந்த அனைவருக்கும் அதே அச்சம் ஏற்பட்ட நிலையில் வேறு வழியின்றி அம்ரித்தை நடுவழியில் இறக்கி விட்டுள்ளனர்.

இந்நிலையில் கொளுத்தும் வெயிலில் தன் நண்பனை மடியில் படுக்க வைத்துக்கொண்டு யாகூப் சாலையில் செல்லும் அனைவரிடமும் உதவி கேட்டுள்ளார். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை. இதனைக்கண்ட உள்ளூர் மக்கள் முன்வந்து மாவட்ட மருத்துவமனைக்கு அம்ரித்தை கொண்டுசென்றனர். அவரது உடல்நிலை மோசமாக இருந்ததையடுத்து உடனடியாக வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அம்ரித் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நண்பனை மடியில் போட்டவாறு  யாகூப், உதவிகேட்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.