காதலியை திருமணம் செய்ய முயற்சித்த இளைஞன்.! பெண் வீட்டார் செய்த மோசமான செயல்.! அதிர்ச்சி சம்பவம்.!
காதலியை திருமணம் செய்ய முயற்சித்த இளைஞன்.! பெண் வீட்டார் செய்த மோசமான செயல்.! அதிர்ச்சி சம்பவம்.!
கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டம் சங்கபுரா கிராமத்தை சேர்ந்தவர் அனுமேஷ் போவி. 22 வயது நிரம்பிய இவரும், அதே கிராமத்தில் வசித்து வரும் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், இளம்பெண்ணின் குடும்பத்தினர் அந்த பெண்ணிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து அந்த பெண் தனக்கு திருமணம் ஏற்பாடு செய்வதாக காதலனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அனுமேஷ் போவி அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியே வா... நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த பெண் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். ஆனால் இந்த விஷயம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் இளம்பெண்ணுக்கு அவசரம், அவசரமாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அனுமேஷ் போவி வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய போது, மர்மநபர்களா அவரை கத்தியால் சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர்.
இதனையடுத்து அருகில் இத்திருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அனுமேஷ் போ உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், காதலியை திருமணம் செய்ய முயன்று அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த அனுமேஷ் போவியை, இளம்பெண்ணின் குடும்பத்தினர் சிலர் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாகி உள்ள இளம் பெண்ணின் குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.