காதலனை நம்பி அவரது வீட்டிற்கு சென்ற இளம் பெண்! அங்கு நடந்த கொடூர சம்பவம்!
காதலனை நம்பி அவரது வீட்டிற்கு சென்ற இளம் பெண்! அங்கு நடந்த கொடூர சம்பவம்!
சத்தீஷ்கர் மாநிலம் ராய்பூரில் இருக்கும் மருத்துவமனைக்கு 20 வயது இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் மருத்துவர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதர் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண், அவருடைய காதலனை சந்திப்பதற்காக கடந்த 18-ஆம் தேதி அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது காதலன்தன்னுடன் பேச வேண்டும் என்று வீட்டிற்கு வரும் படி கூறியுள்ளான். இதையடுத்து அந்த பெண் அவரின் வீட்டிற்கு சென்ற போது, இளைஞனுக்கு பதிலாக இளைஞனின் பெற்றோர் மற்றும் அவரின் சகோதரி இருந்துள்ளனர்.
அவர்கள், வீட்டிற்கு வந்த பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கி மண்ணெண்ணய்யை எடுத்து அவர் மீது ஊற்றி தீயை கொளுத்தியுள்ளனர். இதனால் தீக்காயம் ஏற்பட்டு கடந்த சனிக்கிழமை அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் காதலனின் பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அவர்களை தேடி வருகின்றனர்.