கணவன் செய்யும் காரியமா இது?.. மனைவியை உறவினர்களுக்கு.., வீடியோ எடுத்து மிரட்டல்.. பகீர் சம்பவம்.!

கணவன் செய்யும் காரியமா இது?.. மனைவியை உறவினர்களுக்கு.., வீடியோ எடுத்து மிரட்டல்.. பகீர் சம்பவம்.!



women-gang-rape-issue-rajasthan

மனைவியை உறவினர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய கணவர் மீது மனைவி புகார் அளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியில் ஒருவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியிடம் நீ' உன் வீட்டில் வரதட்சனை வாங்கி வரவேண்டும்' எனக் கூறி உறவினர்களுடன் மிரட்டி வந்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து அவர் வரதட்சனை வாங்கி வராததால், கோபமுற்ற கணவர் தனது உறவினர்களுடன் மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அத்துடன் அதனை வீடியோவாக எடுத்து வைத்து 'சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பணம் சம்பாதிப்பேன், ஒழுங்காக நீயே வரதட்சணை வாங்கி கொடுத்து விடு' என மிரட்டி வந்துள்ளார்.

மேலும், முன்பே மனைவியை பலாத்காரம் செய்த வீடியோவை யூடியூப் பக்கத்தில் பதிவிட்டதால், மனைவி வரதட்சணை பணத்தை நான் பெற்று தருகிறேன் என்று கூறியுள்ளார்.

rajasthan

இருப்பினும் மனைவியால் பணத்தை பெற்று தர இயலாததால், அவர் மனைவியை தினமும் துன்புறுத்தி வந்துள்ளார். இதற்கு மேல் பொறுக்க முடியாது என எண்ணிய பெண், தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். 

புகாரில், மாமியார் தன்னை தொடர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வருவதாகவும், கணவர் இதற்கு ஒரு படி மேல் சென்று, அவரது உறவினர்களுடன் தன்னை கூட்டு பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தனது கணவரின் உறவினர் ஒருவரும் தன்னை துன்புறுத்தி பலாத்காரம் செய்து விடுவதாக, மிரட்டி வருவதாகவும், அவரிடமிருந்து ஒருமுறை நான் தப்பித்து ஓடி வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, "பாதிக்கப்பட்ட பெண் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம், குற்றவாளிகள் கூடிய சீக்கிரம் கூண்டில் ஏற்றப்படுவார்கள்" என்று கூறியுள்ளனர்.