கள்ளக்காதலனுக்காக கணவனுக்கு சாப்பாட்டில் போதை மாத்திரை கலந்து கொடுத்து கொன்ற மனைவி..! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!!

கள்ளக்காதலனுக்காக கணவனுக்கு சாப்பாட்டில் போதை மாத்திரை கலந்து கொடுத்து கொன்ற மனைவி..! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!!


wife-who-killed-her-husband-by-mixing-a-drug-pill-in-hi

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் லால் சேட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாந்த்சென் கிராமத்தில் ஓம்பிரகாஷ் குர்ஜார் என்பவருக்கும் ரெஸ்டா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் ஓம்பிரகாஷ் மற்றும் அவரது மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இந்நிலையில் ஓம்பிரகாஷ் மனைவிக்கு பின்டு என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். 

மனைவியின் பழக்கவழக்கம் கணவனுக்கு தெரிந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அந்த கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்த மனைவி ரெஸ்டா, கொலை நடந்த அன்று ஓம் பிரகாஷின் தந்தை உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். 

இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட மனைவி ரெஸ்டா கள்ளக்காதலன் மூலம் தூக்க மாத்திரைகளை வாங்கி வந்தார். அன்றிரவு கணவனுக்கு வகைவகையாக உணவு சமைத்தார் அந்த உணவில் தூக்கமாத்திரைகளை கலந்து தனது கணவருக்கு மாமியாருக்கு கொடுத்தார். சாப்பிட்டு விட்டு இருவரும் சிறிது நேரத்தில் மயங்கினர். பின்னர் கள்ளக்காதலன் உதவியுடன் பலமுறை கடுமையாக தாக்கி கொலை செய்தார்.

இந்நிலையில் மயக்கம் தெளிந்து எழுந்த அவரது மாமியார் சந்தேகத்துக்கிடமான முறையில் படுக்கையில் இறந்து கிடந்த தனது மகனைப் பார்த்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது மனைவி மற்றும் தாயாரை விசாரித்தனர், அப்போது அவர்களது வீட்டில் சமையலறையில் போதை மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் சந்தேகம் அடைந்த ஓம் பிரகாஷின் தாயார் தனது மருமகள் மீது சந்தேகம் இருப்பதாக கூறினார். வழக்கமாக காலையில் எழுந்துவிடும் தன்னால் எழுந்திரிக்க முடியவில்லை. எனது மருமகள் உணவில் ஏதோ கலந்த கொடுத்திருக்கக் கூடும் என்றும் வழக்கத்துக்கு மாறாக மருமகள் எனது மகனுக்கு நேற்று இரவு உணவை ஊட்டி விட்டார் என காவல்துறையினர் இடம் கூறினார். 

இந்நிலையில் மருமகள் ரெஸ்டாவை தனியாக காவல்துறையினர் விசாரணை நடத்தியதில்,  கணவனுக்கு உணவில் தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். கொலை நடந்த 12 மணி நேரத்தில் காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.