கணவன் மனைவிக்கு இடயே ஏற்பட்ட சண்டை.! சமாதானம் செய்ய வந்த நண்பன் மீது ஏற்பட்ட கள்ளக்காதல்.! பரிதாபமாக போன உயிர்.!

கணவன் மனைவிக்கு இடயே ஏற்பட்ட சண்டை.! சமாதானம் செய்ய வந்த நண்பன் மீது ஏற்பட்ட கள்ளக்காதல்.! பரிதாபமாக போன உயிர்.!


wife-killed-her-husband-for-her-illegal-affair-n592ra

கார்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா தொட்டஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் (வயது 32). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி ரோகிணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பிரதீப்பின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பிரதீப்பின் மரணம் டதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், பிரதீப்பின் மனைவி தனது கணவனை காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிரதீப் அடிக்கடி மது போதையில் வந்து ரோகிணியுடன் தகராறு செய்து அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக வீட்டிற்கு சமாதானம் செய்வது போல், பிரதீப்பின் நண்பர் சீனிவாசன் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

husband and wife

இந்தநிலையில், ரோகிணிக்கும் சீனிவாசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளைடைவில் மிகவும் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கணவர் பிரதீப்புக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பிரதீப் இருவரையும் கண்டித்துள்ளார். இதனையடுத்து கணவர் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பார் என முடிவு செய்து கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

இந்தநிலையில், குடிபோதையில் இருந்த கணவர் பிரதீப்பை ரோகிணி அவரது காதலனுடன் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். குழந்தைகள் அப்பா எங்கே கேட்டபோது தூங்குவதாக கூறி குழந்தைகளையும் தூங்கவைத்துள்ளார். பின்னர் தனது கணவர் குடிபோதையில் இறந்துவிட்டதாக கூறி ரோகிணி நாடகமாடியுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.