வெளிமாநிலத்தில் வேலை செய்யும் கணவன்.! இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு வாலிபருடன் ஓட்டம்பிடித்த மனைவி.!

வெளிமாநிலத்தில் வேலை செய்யும் கணவன்.! இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு வாலிபருடன் ஓட்டம்பிடித்த மனைவி.!


wife escaped with young boy

கேரள மாநிலம் கொல்லம் புனலூர் பகுதியை சேர்ந்தவர் சின்னு. 30 வயது நிரம்பிய இவருக்கு 5 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சின்னுவின் கணவர் தமிழகத்தில் வேலை செய்து வந்துள்ளார். சின்னுவின் கணவர் மதத்திற்கு இரண்டு அல்லது ஒருமுறை கேரளாவிற்கு வந்து குழந்தைகள் மற்றும் மனைவியை பார்த்து சென்றுள்ளார்.

இந்தநிலையில் வீட்டில் தனிமையில் இருந்த சின்னுவுக்கும் கொல்லம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் சின்னு தனது இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு கடந்த 6 மாதத்தங்களுக்கு முன்பு கள்ளக்காதலனுடன் ஓட்டம்பிடித்தார்.

அனாதையாக தவித்த இரண்டு குழந்தைகளும் உறவினர்கள் வீட்டில் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சின்னுவின் கணவரும் பேரதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சின்னு திருச்சூரில் கள்ளக்காதலனுடன் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.