செல்பி விபரீதம்.. கணவன் கண்முன்னே மனைவி துடிதுடிக்க உயிரிழப்பு.. கண்ணீர் சோகம்.. மக்களே விழிப்புடன் இருங்கள்.!

செல்பி விபரீதம்.. கணவன் கண்முன்னே மனைவி துடிதுடிக்க உயிரிழப்பு.. கண்ணீர் சோகம்.. மக்களே விழிப்புடன் இருங்கள்.!


wife-dead-infront-of-her-husband

செல்பி எடுக்க முயன்ற போது, ஒரு பெண் தனது கணவரின் கண்முன்னே உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூர் அடுத்த நெஞ்சதேவனாபுறா பகுதியில் வசித்து வருபவர்கள் க்ரிஷ்- கவிதா தம்பதியினர். இவர்கள் நஞ்சனகுடு கபிலா நதி கரையோரம் அமைந்துள்ள சங்கமம் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர்.

அப்போது கபிலா நதியை பார்த்து மிகவும் ஆர்வமடைந்த கவிதா நதியின் அருகாமையில் நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென அவரது கால் தவறி கீழே விழுந்த நிலையில், ஆழமான பகுதிக்கு கவிதா தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

girl

அத்துடன் கணவர் காப்பாற்ற முயன்றும் பரிதாபமாக அவரது கண்முன்னே உயிரிழந்துள்ளார். பின் இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், கவிதாவின் உடலை நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் மீட்டனர். 

பின் அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், க்ரிஷ் 'தனது கண்முன்னே தன் மனைவி இறந்துவிட்டாளே, ஆனால் என்னால் காப்பாற்றி இயலவில்லையே' என்று கூறி கண்ணீர் மல்க அழுத சம்பவம் பார்ப்பவர்களை கண்கலங்க செய்துள்ளது.