#BREAKING : நடிகர் விஜய் மீது போலிஸில் புகார்.. வாக்குச்சாவடியில் அத்துமீறல்.?!
தாலி கட்டுன புருஷன்னுகூட பார்க்கல!! பட்டபகலில் நடுரோட்டில் சட்டை கிழியும் அளவுக்கு அடித்த மனைவி!! வைரல் வீடியோ..
தாலி கட்டுன புருஷன்னுகூட பார்க்கல!! பட்டபகலில் நடுரோட்டில் சட்டை கிழியும் அளவுக்கு அடித்த மனைவி!! வைரல் வீடியோ..
கணவனை நடுரோட்டில் வைத்து சட்டை கிழிய கிழிய அடித்த மனைவியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
குறிப்பிட்ட சம்பவமானது மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராஜ்புத் மற்றும் பாவனா என்பவர்களுக்கு இடையே கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில மாதங்களிலையே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் விவாகரத்து கேட்டு நீதி மன்றத்திற்கு சென்றுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவரும்நிலையில், சம்பவத்தன்று, எதர்ச்சியாக கணவன் மனைவி இருவரும் சாலையில் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. தனது தந்தையுடன் வந்திருந்த பாவனா, தனது தந்தையுடன் சேர்ந்து தனது கணவனை நடு ரோட்டில் சட்டை கிழிய கிழிய அடித்துள்ளார்.
இதனால் அந்த பகுதியில் மக்கள் கூட்டம் கூடவே, அந்த பகுதியில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது. ஆனாலும் தனது கணவனை பாவனா அடிப்பதை நிறுத்தவில்லை. ஒருகட்டத்தில் போலீசார் அங்கு வந்து இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சண்டையின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.