Breaking: இலங்கையில் புதிய அதிபராக இடைக்கால அதிபர் விக்ரமசிங்கே தேர்வு...
Breaking: இலங்கையில் புதிய அதிபராக இடைக்கால அதிபர் விக்ரமசிங்கே தேர்வு...
இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கே இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து இன்று அதிபர் பதிவிக்கான தேர்தல் நடைபெற்றது.
அதில் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இடதுசாரி ஆதரவாளரான அனுர திஸாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டி இருந்த நிலையில் 2 பேர் நிராகரிக்கவே 223 பேர் மட்டும் வாக்களித்தனர்.
வாக்களிக்கப்பட்ட வாக்குகளில் 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் 134 வாக்காளர்கள் ரணில் விக்ரம்சிங்கை தேர்வு செய்துள்ளனர். அதன்படி, ரணில் விக்ரமசிங்கே 2024 நவம்பர் மாதம் வரையில் இலங்கை அதிபர் பதவியில் இருப்பார்.