பாக். வெளியுறவுத்துறை அமைச்சரின் தலைக்கு ரூ.2 கோடி.. பாஜக நிர்வாகியின் பேச்சால் பரபரப்பு..!
பாக். வெளியுறவுத்துறை அமைச்சரின் தலைக்கு ரூ.2 கோடி.. பாஜக நிர்வாகியின் பேச்சால் பரபரப்பு..!
தனது நாட்டின் பிரதமரை அவதூறாக பேசிய பாகிஸ்தான் அமைச்சரின் தலையை கொண்டு வருவோருக்கு ரூ.2 கோடி பணம் வழங்கப்படும் என பாஜக தொண்டர் பேசினார்.
பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவால் பூட்டோ, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக சர்ச்சை கருத்தை தெரிவித்து இருந்தார். இந்த கருத்துக்கு மத்திய அரசு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருந்தது.
இதனால் பிலாவல் பூட்டோவுக்கு எதிராக இந்திய அளவில் பாஜகவினர் பல போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாக்பாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாஜக போராட்டம் நடத்தியது.
அப்போது, பாஜகவின் உள்ளூர் நிர்வாகி, மாவட்ட கவுன்சில் உறுப்பினர் மனுபால் பன்சால் உரையாற்றிக்கொண்டு இருக்கையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரின் தலையை துண்டித்து கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு என அறிவித்தார்.