குடும்பத் தகராறில் பேத்தி கிணற்றில் தள்ளி கொலை: தாய்கிழவி அதிர்ச்சி செயல்.!

குடும்பத் தகராறில் பேத்தி கிணற்றில் தள்ளி கொலை: தாய்கிழவி அதிர்ச்சி செயல்.!



Uttar Pradesh Aged Lady Killed Grand Daughter

 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள நோன்ட்ரா மாவட்டத்தில் வசித்து வரும் பெண்மணி சுதமா (வயது 50). இவருக்கு சந்தோஷ் நிஷாத் என்ற மகன் இருக்கிறார். சந்தோஷுக்கு திருமணம் நடைபெற்று முடிந்து மனைவி, 10 வயதுடைய ரியா என்ற மகளும் இருக்கிறார்.

சந்தோஷ் தனது மனைவி மற்றும் மகளுடன் தங்கி இருக்கிறார். இவர்களுடன் தாயும் வசித்து வரும் நிலையில், குடும்ப தகராறு காரணமாக மூதாட்டி சுகமா தனது பேத்தி ரியாவை கிணற்றில் தள்ளிவிட்டு இருக்கிறார்.

இந்த சம்பவத்தில் சிறுமி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், விசாரணைக்கு பின் மூதாட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.