புலியை கண்டதும் இறந்தவர் போல் நடித்த நபர்! அருகில் சென்று உற்றுப்பார்த்த புலி! வைரலாகும் வீடியோ.
புலியை கண்டதும் இறந்தவர் போல் நடித்த நபர்! அருகில் சென்று உற்றுப்பார்த்த புலி! வைரலாகும் வீடியோ.
மும்பையில் வயல்வெளி ஒன்றில் புலி ஒன்று உள்ளே நுழைந்து அங்கு இருந்த நபரை தாக்க முயன்றுள்ளது. அப்போது அந்த நபர் சாதுரியமாக இறந்தவர் போல் நடித்து புலியை ஏமாற்றிய நிகழ்வு அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அருகே உள்ள பாந்தரா மாவட்டத்தில் புலி ஒன்று உள்ளே வந்துள்ளது. அப்போது அங்கு இருந்த நபர் ஒருவரை தாக்க முயன்றுள்ளது. இதனை அறிந்த அந்த நபர் உடனே சாதுரியமாக செயல் பட்டுள்ளார்.
அதாவது தன்னை தாக்க வந்த புலியை ஏமாற்ற இறந்தவர் போல் நடித்துள்ளார். ஆனாலும் அந்த புலி விடாமல் அருகில் சென்று அவரை உற்றுநோக்கியுள்ளது. அப்போது அங்கிருந்த மக்கள் அனைவரும் சத்தமிட்டு கொண்டு வரவே புலி பயந்து ஓடும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
You want to see how does a narrow escape looks like in case of encounter with a #tiger. #Tiger was cornered by the crowd. But fortunately end was fine for both man and tiger. Sent by a senior. pic.twitter.com/1rLZyZJs3i
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) January 25, 2020