தேடப்பட்டு வந்த கள்ளக்காதல் ஜோடி ஏரியில் சடலங்களாக மீட்பு: துப்பட்டாவால் கைகளை கட்டிக் கொண்டு குதித்தது அம்பலம்..!

தேடப்பட்டு வந்த கள்ளக்காதல் ஜோடி ஏரியில் சடலங்களாக மீட்பு: துப்பட்டாவால் கைகளை கட்டிக் கொண்டு குதித்தது அம்பலம்..!



The wanted pair of counterfeiters were recovered as dead bodies in the lake

கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகாவில் உள்ள ஒரு ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் மற்றும் பெண் உடல்கள் மிதந்தன. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், சன்னகிரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் தகவலறிந்த காவல்ததுறையினர் சம்பவ இடத்திற்கு சென்று 2 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஏரியில் இறந்த நிலையில் மீட்கப்பட்டவர்கள், பெங்களூரு, பசவேஸ்வர் நகர் பகுதியை சேர்ந்த சரண் மற்றும்  ஹெக்கனஹள்ளி பகுதியை சேர்ந்த நாகரத்னா என்பது தெரியவந்தது. இவர்களுள்  நாகரத்னாவுக்கு திருமணமாகி கணவர் உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரண் மற்றும் நாகரத்னாவுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.  நாகரத்னாவின் கள்ளத்தொடர்பு குறித்து அவரது கணவருக்கு தெரியவந்தது. இதனால் நாகரத்னாவிடம் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு, அவரது கணவர் கூறியுள்ளார். ஆனால் அதற்கு நாகரத்னா மறுத்துள்ளார்.

மேலும், நாகரத்னா சரணுடனான தனது தொடர்பு கணவருக்கு தெரிந்துள்ளது குறித்து சரணிடம்  கூறியுள்ளார். பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து கடந்த 13 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறினர். நாகரத்னா மாயமானது குறித்து அவரது கணவர் ராஜகோபால் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்தூறையினர் அவர்களை தேடி வந்துள்ளனர். இதற்கிடையே தாவணகெரே பகுதிக்கு வந்த கள்ளக்காதல் ஜோடியினர் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளனர். இதனையடுத்து பெங்கிகெரே ஏரி பகுதிக்கு சென்ற இருவரும், துப்பட்டாவால் கைகளை ஒன்றாக கட்டிகொண்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.