பேக் ஐடியில் பேசியது காதலன் என தெரியாமல் பழகிய காதலி... இறுதியில் ஆத்திரமடைந்த காதலனின் கொடூர செயல்..!
பேக் ஐடியில் பேசியது காதலன் என தெரியாமல் பழகிய காதலி... இறுதியில் ஆத்திரமடைந்த காதலனின் கொடூர செயல்..!
கேரளாவில் வர்கலா அடுத்த வடசேரிகோணம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ் என்பவரின் மகள் சங்கீதா. இவர் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சங்கீதாவிற்கும் பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த கோபு என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே காதலர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் கோபுவிற்கு சங்கீதாவின் நடத்தைமேல் சந்தேகம் வரவே அகில் என்ற பேக் ஐடி ஒன்றை உருவாக்கி சங்கீதாவிற்கு நட்பு அழைப்புவிடுத்து பேச தொடங்கியுள்ளார்.
மேலும் பேக் ஐடியில் அகில் என்ற பெயரில் பேசுவது தனது காதல்தான் என்று அறியாத சங்கீதா அந்த நபரிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனையடுத்து தான் உருவாக்கிய ஃபேக் ஐடியில் சங்கீதா பேசுவதைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார் கோபு.
இதனைத்தொடர்ந்து சம்பவத்தன்று அகில் என்ற பேக் ஐடி மூலமாக பேசிய கோபு உன்னை சந்திக்க இன்று இரவு 1:30 மணிக்கு உங்கள் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு சங்கீதா வீட்டு வாசலில் வந்து நின்றுள்ளார். இந்நிலையில் அங்கு ஹெல்மெட் அணிந்தபடி வந்த கோபு தன் வைத்திருந்த கத்தியால் சங்கீதாவின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடி உள்ளார்.
இதனையடுத்து சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தனர் உறவினர்கள். ஆனால் அதற்குள் சங்கீதா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார்க்கு தகவல் தெரிவிக்கவே அங்கு வந்த போலீசார் சங்கீதாவின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.