கண்ட்ரோல் ரூமுக்கு போன் போட்டு, காவலர்களை பதறவிட்டு ஜில் பியர் கேட்ட இளைஞர்.. அன்பாக உபசரித்த காவலர்கள்.!

கண்ட்ரோல் ரூமுக்கு போன் போட்டு, காவலர்களை பதறவிட்டு ஜில் பியர் கேட்ட இளைஞர்.. அன்பாக உபசரித்த காவலர்கள்.!



Telangana Bear Man call Control room

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விகாராபாத் பகுதியில் வசித்து வரும் 22 வயது வாலிபர், திங்கட்கிழமை நள்ளிரவில் காவல் துறையினரின் கட்டுப்பட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, அவசர நிலை தன்னால் போனில் எதுவும் கூற இயலாது என்று அழைப்பை துண்டித்துள்ளார். 

இதனையடுத்து, உயிர்போகும் ஆபத்து என கருதி சரக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், 2 காவலர்கள் இளைஞரின் வீட்டை சைபர் கிரைம் அதிகாரிகள் உதவியுடன் இருப்பிடத்தை கண்டறிந்து நேரில் சென்றுள்ளனர். அப்போது, வாலிபர் மதுபோதையில் இருந்தது உறுதியானது. 

மேலும், விசாரிக்க சென்ற காவலர்களிடம் 2 ஜில் பியர் எனக்கு வேண்டும். அதனை உடனே வாங்கி வாருங்கள் என்று தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு கொதித்துப்போன காவலர்கள் வாலிபரை அன்பாக கவனித்து, மறுநாள் நேரில் காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். 

வாலிபரின் தந்தையிடம் விஷயத்தை கூறிவிட்டு கண்டித்து சென்ற நிலையில், மறுநாள் காவல் நிலையம் சென்ற வாலிபரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.