வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வயதான தம்பதி! திடீரென கேட்ட அலறல் சத்தம்! அடித்துக் கொன்ற மனநலம் குன்றிய சிறுவன்!

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வயதான தம்பதி! திடீரென கேட்ட அலறல் சத்தம்! அடித்துக் கொன்ற மனநலம் குன்றிய சிறுவன்!


Small boy killed aged couples who sleeping in house

வராந்தாவில் தூங்கிக்கொண்டிருந்த வயதான தம்பதியினரை மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வயதான தம்பதியினர்:

உதிர்ப்பிரதேச மாநிலத்தில் உள்ளது ஹர்கோலி என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் வயதான தம்பதியினரான ஸ்ரீநாத் மவுரியா (70) மற்றும் அவரது மனைவி மைனா தேவி (65). இவர்களது மகன் மும்பையில் பணிபுரிந்துவரும் நிலையில் வயதான தம்பதியினர் மட்டும் வீட்டில் தனியாக வசித்துவந்துள்ளனர்.

அடித்து கொலை:

இந்நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் தங்கள் வீட்டின் வராந்தாவில் தூங்கிக்கொண்டிருந்தபோது அதே கிராமத்தை சேர்ந்த கோலு மவுரியா என்ற 16 வயது சிறுவன் வயதான கணவன் மனைவி இருவரையும் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளான்.

சிறுவன் அவர்களை தாக்கியபோது வயதான தம்பியினரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன்:

இதனை அடுத்து நடந்த விசாரணையில், கொலை செய்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், சிறுவனின் பெற்றோர் எப்போதும் அவரை தனி அறையில் பூட்டி வைத்திருந்தநிலையில், சம்பவத்தன்று அந்த சிறுவன் அறைக்கதவை திறந்துகொண்டு வெளியே வந்து வயதான தம்பதியினரை காரணமே இல்லாமல் கொலை செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.