பரபரப்பு வீடியோ: ரயில் படியில் இடறிய கால்கள்.. உயிருக்கு போராடிய பயணி.. பத்திரமாக மீட்ட ரயில்வே போலீசார்
பரபரப்பு வீடியோ: ரயில் படியில் இடறிய கால்கள்.. உயிருக்கு போராடிய பயணி.. பத்திரமாக மீட்ட ரயில்வே போலீசார்
கோவாவில் ஓடும் ரயில் சிக்கிய ரயில் பயணியை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
கோவாவின் வாஸ்கோடகாமா ரயில் நிலையத்தில் இருந்து ரயில் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அப்போது ரயிலில் ஏறுவதற்காக ஓடிவந்த பயணி ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்றுள்ளார்.
அப்போது, அந்த பயணியின் கால் இடறி அவர் தவறி விழுந்தார். அவரால் ரயில் உள்ளேயும் செல்ல முடியாமல், வெளியில் குதிகவும் முடியாமல் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தபோது, நடைபாதையில் வந்து கொண்டிருந்த ரயில்வே காவலர் உடனடியாக சுதாரித்து அந்த நபரை காப்பாற்றினார்.
சிறிது தாமத்திருந்தாலும் அந்த பயணியின் உயிரே போயிருக்கும். இந்நிலையில் இந்த காட்சிகள் அனைத்தும் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ள நிலையில் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
Life saving act by RPF personnel at Vasco station in SWR!
— Ministry of Railways (@RailMinIndia) March 11, 2021
At Vasco station,a passenger tried to board the moving train 02741 Vasco-Patna express &slipped into the gap between Platform and train
Passengers are requested not to board/deboard a moving train. It may risk your life. pic.twitter.com/zkIva0rAkJ