நாடே அதிர்ச்சி.. பிரபல கோவிலுக்குள் பக்தர்களால் மர்ம நபர் அடித்து கொலை..!
நாடே அதிர்ச்சி.. பிரபல கோவிலுக்குள் பக்தர்களால் மர்ம நபர் அடித்து கொலை..!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோவில், சீக்கியர்களின் புனித தலமாக இருந்து வருகிறது. இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். சீக்கிய குருக்கள் பூஜை செய்வதற்கென தனி இடம் உள்ளது. புனித நூல் மற்றும் வைரம் பதித்த வாள் போன்றவையும் கருவறையில் உள்ளது.
இந்த இடத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. நேற்று உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருந்து வந்த நபர், குருக்கள் பூஜை செய்யும் இடத்திற்கு சென்று புனித நூல் மற்றும் வாளினை எடுக்க முயற்சித்துள்ளார்.
இதனைக்கண்ட பாதுகாவலர்கள் அவரை பிடித்து வெளியே இழுத்து வந்த நிலையில், ஆத்திரமடைந்த சீக்கிய பக்தர்கள் நபரை அடித்து உதைத்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் நபர் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.