பிரணாப் முகர்ஜி உடல்நிலை தற்போது எப்படி உள்ளது? வதந்திகளை நம்பவேண்டாம்! பிரணாப்பின் மகள் மற்றும் மகன் வெளியிட்ட தகவல்!

பிரணாப் முகர்ஜி உடல்நிலை தற்போது எப்படி உள்ளது? வதந்திகளை நம்பவேண்டாம்! பிரணாப்பின் மகள் மற்றும் மகன் வெளியிட்ட தகவல்!



pranap-mukharjee-daughter-and-son-talk-about-their-fath

முன்னாள் ஜனாதிபதியும், பாரத ரத்னா விருது பெற்றவருமான பிரணாப் முகர்ஜி கடந்த 9- ஆம் தேதி உடல்நல கோளாறு காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் பிரணாப்பின் மூளையில் ரத்தம் உறைந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பிரணாப் முகர்ஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

இதனையடுத்து அவரது மூளையில் இருந்த ரத்தக்கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. ஆனாலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இந்தநிலையில், பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா முகர்ஜி எனது தந்தையின் உடல்நலனிற்காக பிரார்த்திக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி என்று கூறியிருந்தார். 

ஆனால் இந்த சூழலில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து சிலர் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகள் ஷர்மிஷ்தா முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், எனது தந்தை பற்றி பரவும் வதந்திகளில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.


இதேபோல் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி தனது ட்விட்டரில், "என்னுடைய தந்தை உயிருடன் தான் இருக்கிறார். பிரபல பத்திரிகையாளர்கள் கூட தவறான செய்தியை பரப்பிக் கொண்டிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.