செல்போன் திருடனை பிடிக்க சென்ற ஆசிரியர் மரணம்... திட்டமிட்ட கொலையா?...! போலீசார் விசாரணை.!
செல்போன் திருடனை பிடிக்க சென்ற ஆசிரியர் மரணம்... திட்டமிட்ட கொலையா?...! போலீசார் விசாரணை.!
செல்போனை திருடிச்சென்ற நபரை துரத்தி சென்ற ஆசிரியர் மீது ரயில் மோதி உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ஷதோல் நகரில் வசித்து வருபவர் மனோஜ் நிமா (வயது 54). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று தனது சொந்த ஊருக்கு இவர் ரயிலில் சென்று கொண்டிருந்தபோது, 7 மணியளவில் அவருடன் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் மனோஜின் செல்போனை கேட்டுள்ளார்.
தனது நண்பர் ஒருவருக்கு அவசரமாக தகவல் ஒன்றை தெரிவிக்க வேண்டும் என கூறியதால், மனோஜும் தனது செல்போனை கொடுத்திருக்கிறார். அதனை வாங்கிய இளைஞர் திடீரென ரயிலின் வேகம் குறையும்போது, செல்போனை எடுத்துக்கொண்டு வெளியே ஓடியுள்ளார்.இதனைப் பார்த்த மனோஜும் உடனடியாக ரயிலிலிருந்து குதித்து அவரை துரத்தி சென்ற நிலையில், மற்றொரு தண்டவாளத்தில் வந்த ரயில் அவர் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பின் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் இறந்தது தற்செயலா? அல்லது திட்டமிட்ட கொலையா? என விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், அவரின் போனை திருடிச்சென்ற இளைஞரையும் தேடி வருகின்றனர்.