அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
சாலையில் கொழுந்துவிட்டெரிந்த பயணிகள் பேருந்து.! உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த பயணிகள்.!
சாலையில் கொழுந்துவிட்டெரிந்த பயணிகள் பேருந்து.! உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த பயணிகள்.!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுச்சாலையில் நேற்று ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அதில் பலர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்தநிலையில், ஜெய்ப்பூர் மாவட்டம் அன்ஞ்ரோல் என்ற பகுதியில் உள்ள நெடுச்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது தாழ்வாக தொங்கிய மின் கம்பி மீது பேருந்து உரசியுள்ளது.
இதனால், பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. பேருந்தில் தீ பற்றியதை கவனிக்காத ஓட்டுநர் தொடர்ந்து பேருந்தை இயக்கியுள்ளார். இதனால் பேருந்து முழுவதும் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். தீ பற்றியதை கவனித்த பயணிகள் அலறியடித்து பேருந்தில் இருந்து வெளியே வந்துள்ளனர்.
Rajasthan: Three dead and several others injured after a bus they were travelling in caught fire allegedly after coming in contact with a low-lying high voltage wire on Delhi-Jaipur Highway. Injured admitted to hospital. pic.twitter.com/6jOBuZQfVA
— ANI (@ANI) November 27, 2020
இந்த தீ விபத்தில் சிக்கி பேருந்தில் இருந்த பயணிகளில் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் பேருந்தில் பற்றியை தீயை அணைக்கு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.