மகளின் சடலத்தை சாலையில் போட்டு போராடிய பெற்றோர்! வெளியான அதிர்ச்சி தகவல்!

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஆர்ட்ஸ் கல்லூரியில் இளநிலை 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இப்ராஹீம் என்ற இளைஞரும் 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இப்ராஹீமுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பது அந்த கல்லூரி மாணவிக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த கல்லூரி மாணவி, இப்ராஹீமிடம், ஏன் திருமணமானதை மறைத்து என்னை காதலித்து ஏமாற்றினாய் என்று கேட்டுள்ளார். இதனையடுத்து அவர்களுக்கிடையே கடும் தகராறு ஏற்பட்டது. இச்சம்பவத்தால் கல்லூரி மாணவி மனமுடைந்து கல்லூரிக்கும் செல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி இரவு வீட்டின் ஒரு அறையில் அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது இப்ராஹீம் தலைமறைவானார்.
இந்நிலையில் கல்லூரி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று இப்ராஹீமை விரைவாக கைது செய்யக்கோரி உயிரிழந்த கல்லூரி மாணவியின் சடலத்துடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீசார் இப்ராஹீமை கைது செய்வதாக கூறி போராட்டத்தை தடுத்தனர். மேலும் போலீசார் இப்ராஹீமை தீவிரமாக தேடி வருகின்றனர்.