மனைவிக்கு பல ஆண்களுடன் தொடர்பு..! முதலாம் ஆண்டு கல்யாண நாளில் கணவன் கொடுத்த விபரீத பரிசு..!

மனைவிக்கு பல ஆண்களுடன் தொடர்பு..! முதலாம் ஆண்டு கல்யாண நாளில் கணவன் கொடுத்த விபரீத பரிசு..!


On first marriage anniversary man kills wife and commits suicide

திருமணம் முடிந்து 1 வருடம் ஆகியும் மனைவிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததால் கணவன் மனைவியை கொலைசெய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பகுதியை சேர்ந்தவர் பைசன், அவரது மனைவி பெயர் சப் நகூர். 21 வயதாகும் இவர்களுக்கு 1 வருடத்திற்கு முன் திருமணம் முடிந்துள்ளது. திருமணம் முடிந்து 1 வருடம் ஆகிய நிலையிலும் மனைவி பல ஆண்களுடன் பழகி வந்தது கணவனுக்கு பிடிக்கவில்லை.

மேலும், எந்நேரம் பாத்தாலும் மனைவி செல்போனில் பேசிக்கொண்டே இருந்துள்ளார். பைசன் தனது மனைவியை கண்டித்தும் அவர் கேட்பதாக இல்லை. இந்நிலையில் இருவருக்கும் முதலாம் ஆண்டு திருமண நாள் வந்துள்ளது. இதனை முன்னிட்டு தனக்கு பரிசு வேண்டும் என மனைவி கணவரிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார்.

Crime

இதனால் ஆத்திரம் அடைந்த பைசன் செல்போன் சார்ஜர் ஒயரால் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து ரயில்நிலையம் சென்றுள்ளார். ரயில் ஏறிய பைசன் சிறிது நேரத்தில் ஓடும் ரயிலில் இருந்து குதித்து தானும் தற்கொலை செய்துகொண்டார்.

தகாத உறவால் மனைவியை கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.