திருமணமான 4 நாட்களிலேயே அடுத்தடுத்ததாக இளம் காதல்ஜோடிக்கு நேர்ந்த துயரம்! துடிதுடித்து கதறிய குடும்பத்தார்கள்!
திருமணமான 4 நாட்களிலேயே அடுத்தடுத்ததாக இளம் காதல்ஜோடிக்கு நேர்ந்த துயரம்! துடிதுடித்து கதறிய குடும்பத்தார்கள்!
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் வசித்து வந்தவர் விஷால். இவர் கைலாஷ்புரி பகுதியைச் சேர்ந்த நிஷா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஆரம்பத்தில் அவர்களது காதலுக்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் தொடர்ந்து இருவரும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். பின்னர் கடந்த திங்கட்கிழமை இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. காதல் ஜோடிகள் இருவரும் மகிழ்ச்சியாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பணிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற விஷால் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன குடும்பத்தார்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது விஷால் மெஹ்ரௌலி ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்ட நிஷா கதறிதுடித்துள்ளார்.
இந்நிலையில் நிஷாவின் குடும்பத்தார்கள் அவரை அவர்களது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.ஆனால் நேற்று காலை நிஷா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் புதுமணத் தம்பதியரின் தற்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.