பெண்மருத்துவர் வழக்கில, சுட்டுக்கொல்லப்பட்ட 4 குற்றவாளிகள் குறித்து முதன்முறையாக நயன்தாரா என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!
பெண்மருத்துவர் வழக்கில, சுட்டுக்கொல்லப்பட்ட 4 குற்றவாளிகள் குறித்து முதன்முறையாக நயன்தாரா என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!
கடந்த வாரம் ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் லாரி டிரைவர்களால் வாயில் மதுஊற்றி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் பெட்ரோல் ஊற்றி கொடூரமாக எரித்தும் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, நவீன் மற்றும் சிறுவர்களான ஷிவா, சின்ன கேசவலு ஆகிய நால்வரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த நிகழ்வுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டுமென குரல்கள் ஓங்கி வந்தது. இந்நிலையில் நேற்று காலை 4குற்றவாளிகளும் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் என அனைவரும் போலீசாருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
தற்போது கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 குற்றவாளிகள் கொல்லப்பட்டது குறித்து நடிகை நயன்தாரா சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை என்று தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
JUSTICE SERVED 🙏🏻 pic.twitter.com/7X0i7JMPph
— Nayanthara✨ (@NayantharaU) December 7, 2019