இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்.. 19 மணி நேர போராட்டத்துக்கு பின் 4 வயது சிறுவன் மீட்பு.!

இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்.. 19 மணி நேர போராட்டத்துக்கு பின் 4 வயது சிறுவன் மீட்பு.!


mumbai-building-accident-boy-rescued-alive-after-19-hours

மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள காஜல்புரா என்னுமிடத்தில் பத்தாண்டுகள் பழமையான ஐந்து அடுக்கு அடுக்குமாடி கட்டிடம் ஒன்று திடீரென நேற்று மாலை இடித்து விழுந்த சோக சம்பவம் ஆரங்கேறியது.

அந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் 45 குடியிருப்புகள் இருந்தன. திடீரென நடைப்பெற்ற இந்த விபத்தில் சுமார் 70 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியை மாநில பேரிடர் குழு மேற்கொண்டு வருகிறது. 

Mumbai

இந்நிலையில் 19 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 4 வயது மொஹம்மது என்ற சிறுவன் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் மீட்பு குழுவினருக்கு சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கிய ஒருவரின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்ட நிலையில் இன்று காலை மேலும் மூன்று பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 25 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா்.