கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனைகள் கூறுபவர்களுக்கு பரிசு அறிவித்த பிரதமர் மோடி! தொகை எவ்வளவு தெரியுமா?

கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனைகள் கூறுபவர்களுக்கு பரிசு அறிவித்த பிரதமர் மோடி! தொகை எவ்வளவு தெரியுமா?



modi announced price for corona idea


கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனைகள் இருந்தால் பகிருங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சிறந்த தீர்வு அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சீனாவில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் நோய் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு, சீனாவில் மட்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1000 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு மருந்து கண்டறியும் முயற்சியில் ஆராய்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனாவால் உலக நாடுகளின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. குறிப்பாக இத்தாலி, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகம் முழுவதும் இதுவரை 6000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனைகள் இருந்தால் பகிருங்கள் என்று பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை இருந்தால் பகிருங்கள் என்றும் சிறந்த தீர்வு அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.